கறிவேப்பிலை லட்டு

அன்று மகள் நந்தினியைக் கூட்டிக் கொண்டு வருவதற்காகப் பள்ளிக்குச் சென்றாள் அருணா. ஒரு ஐந்து நிமிடங்கள் முன்பாகவே வந்து விட்டதால் வெளியே காத்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது கூட இருந்த பிள்ளைகளின் அம்மாக்கள் சிலரும் இருந்தார்கள். பேசிக் கொண்டு இருந்த போது, அகிலா என்ற மாணவியின் அம்மா ரேகா சொன்னாள்:
“என் பெண் அகிலாவுக்கு முடி நிறையக் கொட்டுகிறது; நானும் எவ்வளவோ தைலங்கள் தேய்த்துப் பார்த்து விட்டேன். முடி வளர்ச்சி இல்லவே இல்லை. அதான் ஒரே கவலையா இருக்கு.” என்று.

உடனே இன்னொரு மாணவியின் அம்மா நந்தினி, ” நீங்க, கறிவேப்பிலை லட்டு செஞ்சு தினம் ஒவ்வொன்று சாப்பிட்டு வரச் சொல்லுங்க; முடி நல்லா வளரும்.” என்று சொன்னவுடன், எல்லோரும் “என்னது, கறிவேப்பிலையை வச்சு லட்டா? ஆச்சர்யமா இருக்கே! சொல்லுங்க.” என்று கேட்டுக் கொண்டவுடன் சொல்ல ஆரம்பித்தாள்.

கறிவேப்பிலை லட்டு:

தேவையானவை:

  • சுத்தம் செய்து உலர்த்திய கறிவேப்பிலை – 2 கப்
  • பாதாம் பருப்பு – 15 எண்ணிக்கை
  • பொரிகடலை – ஒரு கைப்பிடி
  • பேரீச்சம்பழம் – 15 எண்ணிக்கை
  • நாட்டுச் சர்க்கரை – 50 கிராம்
  • ஏலக்காய் – 5 எண்ணிக்கை
  • நெய் – 2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானவுடன், பொரிகடலை, பாதாம் பருப்பு போன்றவைகளைப் போட்டுச் சூடாகும் வரை வறுத்து எடுக்கவும். பிறகு கறிவேப்பிலையைப் போட்டு ஈரப்பதம் போகும் வரை வறுத்து எடுக்கவும். பிறகு பேரீச்சம்பழம் கொட்டையை எடுத்து விட்டு, அதை வாணலியில் போட்டு ஈரப்பதம் போகும் வரை வறுத்து எடுக்கவும். ஆறியதும் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். நெய் விட்டுக் கலந்து உருண்டைகளாகப் பிடித்தால் கறிவேப்பிலை லட்டு தயார்.

தினம் ஒரு லட்டு சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். தலை முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

– ஆர். பிருந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *