நூல் : மாயக்கண்ணாடி
ஆசிரியர் : உதயசங்கர்
கண்ணாடிக்குள் 11 கதைகள் உள்ளது. ஒவ்வொன்றும் ராஜா கதைகள். சமகால அரசியல் நிகழ்வுகளைக் குழந்தைகளுக்குக் கதை மூலம் அழகாகச் சொல்கிறார். அதிகாரத்தின் கோமாளித்தனங்களைப் பற்றிய கதைகள். நம் அனைவருக்கும் ஒரு மாயக்கண்ணாடி இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க வைக்கிறார். இதன் அட்டைப்படத்தில் அழகிய சிறு கண்ணாடி ஒன்றையும் பதித்துள்ளார்கள். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் மாயக்கண்ணாடி.

ஆசிரியர் குறிப்பு : கோவில்பட்டி சொந்த ஊர். ரயில்வேயில் பணிபுரிகிறார். 1980 களிலிருந்து சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, சிறுவர் இலக்கியம் ஆகியவற்றில் இயங்கி வருகிறார்.
வானம் பதிப்பகம்.
மாயக்கண்ணாடி : ₹70
செல் : 9176549991