காய்கறி ஓவியம்

குழந்தைகளே! இன்னைக்கு, காய்கறிகளை வைத்து, அழகிய காட்சி ஒன்றை உருவாக்கலாமா?
தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய்கள் – காம்புகளை நீக்கிவிட்டு எடுத்துக் கொள்ளவும்
காலிபிளவர் தண்டுகள் – 6

காலிபிளவர் தண்டுகள், மற்றும் பச்சை மிளகாய் கொண்டு, அழகிய தென்னை மரங்கள் செய்யலாம்.
காலிபிளவர் தண்டுகளை அடுக்கவும். அதன் மேலே, பச்சை மிளகாய்களை, தென்னை ஓலை போல அடுக்கி வைக்கவும். இப்போது, அழகிய தென்னை மரம் தயார்.

இன்னும் நான்கைந்து தென்னை மரங்கள் போல் செய்தால், அழகிய தென்னந்தோப்பு உங்களுடையது.

மரத்தில் தேங்காய்க்கு, சாத்துக்குடி பழ விதைகள் / எலுமிச்சை விதைகளை பயன்படுத்தலாம். பார்ப்பதற்கு குட்டி தென்னங்காய்கள் போலவே இருக்கும்.
செய்து பார்த்துவிட்டு, உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் குழந்தைகளே.

– தமிழ் முகில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *