யானை வந்தது தெருவில்
யானை வந்தது!

ஆடி ஆடி நடந்த யானை
அசைந்து அசைந்து வந்தது!

பெரிய உருவம் யானைக்கு
சின்னஞ்சிறு கண்களாம்!

தும்பிக்கையை உயர்த்தியே
துடிப்பாக வந்ததுவே!

நம்பிக்கையும் நம் மனதில்
பிறக்கவைக்கும் யானை!

கவலைகளை மறந்து நாமும்
கண்டு களித்து நிற்கிறோம்!

தெருவில் யானை வந்தாலே
அனைவருக்கும் கொண்டாட்டம்!

குழந்தைகளின் உற்ற நண்பன்
குதூகலமாய் வந்ததே!

சின்னப் பாப்பா பார்த்ததும்
பரவசமாய்ச் சிரிக்கிறாளே!

குட்டி யானை ஒன்றுமே
கூடவே வந்ததுவே!

நேசம் பரப்பும் யானையை
நாமும் கண்டு மகிழ்வோமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *