வண்ணங்கள்

பாலும், உப்பும் வெள்ளை வெள்ளை

புல்லும், இலையும் பச்சை பச்சை

எலுமிச்சையும், சாமந்தியும் மஞ்சள் மஞ்சள்

கடலும், வானமும் நீலம் நீலம்

முடியும், கரியும் கருப்பு கருப்பு

இரத்தமும், தக்காளியும் சிவப்பு சிவப்பு

பறங்கியும், பப்பாளியும் ஆரஞ்சு ஆரஞ்சு

கத்தரியும், நாவலும் ஊதா ஊதா

கண்ணுக்குக் குளுமை சேர்க்கும் வண்ணம்

மனதுக்கு வளமை சேர்ப்பது திண்ணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *