River Rhymes

ஆறு நதி என்றெல்லாம்

அழகான பெயர் இருக்கும்

நீர் நிறைந்து ஓடும்போது

ஊரெல்லாம் பயன் இருக்கும்

கரையோர நாணல்களும்

தலைநிமிர்ந்து ஆடி நிற்கும்

ஆறு கரை தாண்டாமல்

அணையாகத் தடுத்திருக்கும்

காடு மேடு கழனி எல்லாம்

பச்சைப் பசேல் என்றிருக்கும்

ஆடு மாடு குதிரை மேய

அருகம்புற்கள் வளர்ந்திருக்கும்

செந்நெல்லும் செங்கரும்பும்

செழிப்பாக விளைந்திருக்கும்

பழங்கள் எல்லாம் பழுத்திருக்கும்

பறவைகள் பாடிக் களித்திருக்கும்

அலையில் மீன்கள் துள்ளிவரும்

வளையில் நண்டு ஊர்ந்துவரும்

கொக்கும் வாத்தும் காத்திருக்கும்

கொத்திக்கொண்டு சென்றிருக்கும்

ஊற்றெல்லாம் சுரந்திருக்கும்

உணவும் நீரும் கிடைத்திருக்கும்

மழை வெள்ளம் பெருக்கெடுக்கும்

மக்கள் உள்ளம் மகிழ்ந்திருக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments