இன்று புவனாவின் பிறந்தநாள். பிறந்தநாளுக்கு எங்காவது கூட்டிப்போக சொன்னாள். அம்மா பாட்டி வீட்டுக்கு சென்றிருப்பதால் இன்னொருநாள் போகலாம் என்று சொல்லிவிட்டு அப்பா காலை வேலைக்கு சென்றுவிட்டார்.மேலும் படிக்க –>

ஸ்வாதி சின்னப்பெண். அவளுக்கு எட்டு வயதுதான் ஆகிறது. ஊரில் இருந்து வந்த அவளது தாத்தா, அவளுக்கு களிமண்ணால் ஆன சின்னச் சின்ன சமையல் பொம்மைகளை வாங்கிவந்து கொடுத்திருந்தார்.மேலும் படிக்க –>

திடீரென்று கரண்ட் போய்விட்டது. நல்ல இருட்டு. கட்டிலில் இருந்து இறங்கி மெழுகுவர்த்தி ஏற்றப்போனான் ஜீவா. காலில் பிசுபிசுவென்று ஏதோ ஒட்ட கையால் தடவி பார்த்தான் . ஏதோ சாக்லேட் வாசம் அடிக்க,  ஆச்சரியமாக இருந்தது. மெழுகுவர்த்தியை ஏற்ற, அதன் குறைந்த வெளிச்சத்தில் அங்கே பெரிய அளவில் ஒரு பீரோ போல கீழே கிடந்தது. அருகில் சென்று பார்க்க, சட்டென்று கரண்ட் வந்துவிட்ட்து.             அதை பார்த்து ஜீவாவுக்கு கண்கள் விரிந்தது.மேலும் படிக்க –>

அப்பா ஏதோ புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார். அவரை நெருங்கிய  விஸ்வா அவர் படிப்பதை எட்டிப்பார்த்தான். “என்ன கண்ணா?” என்றார் அப்பா. “எனக்கும் ஏதாவது புத்தகம் தாங்க. படிக்கறேன்” என்றான் விஸ்வா. அவன் அப்படி சொன்னதும் அப்பாவுக்கு முகமெல்லாம் மகிழ்வான சிரிப்பு படர்ந்தது. எழுந்தவர் அவரது அலமாரியில் தேடி ஒரு புத்தகம் எடுத்துத்தந்தார். அதில் கட்டம் கட்டமாக போட்டு படங்கள் வரையப்பட்டிருந்தன. “இதென்னப்பா… படமா இருக்கு. நீங்க படிக்கறது எழுத்தா இருக்கு” “அதுவந்துமேலும் படிக்க –>

ஒரு அழகான காடு. அதில் ஒரு கிராமம். பசுமையான புல்தரை. அதில் நம் முழங்கால் அளவிலான வீடுகள். பெரிய கட்டுமானமெல்லாம் இல்லாமல் மரங்களால் ஆனவை. அதன் கூரைகள் காளான் போன்ற அமைப்பில் அழகாக இருக்கும். அதுபோல பல வீடுகள். அந்த கிராமத்தைச்சுற்றி சிறிய ஓடை அதும் நம் கையளவே. அது தவிர நம் விரல் நடந்துபோகும் அளவுக்கு ஒரு பாலம். தவிர ஒரு அணையும் உண்டு. அதும் சிறியது. பொம்மைமேலும் படிக்க –>