புவனா சந்திரசேகரன் (Page 3)

வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.

panchathanthra dec22

நம்மை யாரும் துன்புறுத்தினாலும் பழிக்குப் பழி வாங்காமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பழிக்குப் பழி வாங்குகையில் அது தொடர் சங்கிலியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.மேலும் படிக்க…

elayaraja oil painting

கவிஞரின் குரல் சின்னச் சின்னக் கண்ணா வா! சிங்காரச் சிரிப்புடன் வா! அம்மாவென நீயழைத்தால் அமுதும் தேனும் பாயுதடா! சின்னச் சின்ன அடிகள் வைத்து சிரித்துக் குலுங்கி நீ நடந்தால் சிந்தையுமே சிலிர்க்குதடா! எந்தன் உளம் களிக்குதடா! வானகத்து நிலவும் இங்கே வையகத்தில் வந்தது போல் நீயும் வந்தாய் என்னருகில! நிலவு தென்றல் சுகம் தந்தாய்! வண்ண வண்ணக் கனவுகள வாழ்வினிலே தந்தவனே! அன்னை மடி தவழுகின்ற அழகு தமிழ்க்மேலும் படிக்க…

poochandi

பஞ்சதந்திரக் கதைகள் அமுதா தன்னுடைய ஐந்து வயது மகள் யாழினிக்கு மொட்டை மாடியில் வைத்து சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள். இரவு நேரம். வானத்தில் பௌர்ணமி நிலவு அவர்களைப் பார்த்து அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தது. ” நிலா நிலா ஓடிவா     நில்லாமல் ஓடிவா மலை மேல ஏறிவா     மல்லிகைப்பூ கொண்டு வா! “ என்று பாடிக்கொண்டே நிலாவைக் காட்டியபடி யாழினியைச் சாப்பிட வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். யாழினியோமேலும் படிக்க…

elephant

பஞ்சதந்திரக் கதைகள் யானைகளின் கூட்டம் ஒன்று காட்டில் வசித்து வந்தது. யானைகளின் அரசன் தனது கூட்டத்துடன் அருகிலிருந்த நீர்நிலையில் நீர் அருந்தி விளையாடி சந்தோஷமாக அங்கு வாழ்ந்து வந்தது. அந்த நீர்நிலையில் நீர் வற்றிப் போக யானைகள் நீர் அருந்த முடியாமல் கஷ்டப் பட்டன. உடனே யானைகளின் அரசன் தனது கூட்டத்திலிருந்த ஒரு யானையை அனுப்பிக் காட்டில் வேறு நீர்நிலை அருகில் இருக்கிறதா என்று தேடிப் பார்த்து அறிந்து வரச்மேலும் படிக்க…

princess dance

பாரம்பரியக் கதைகள் முன்னொரு காலத்தில் ஒரு சிறிய நாடு இருந்தது. அந்த அரசனுக்கு ஏழு அழகான இளவரசிகள் பிறந்தார்கள். பாசத்தோடும், பரிவோடும் அவர்களை அரசன் வளர்த்து வந்தான். இளவரசிகள் வளர வளர அவர்களுடைய குறும்புத்தனமும் கூடி வந்தது. அரசனும் அரசியும் எதற்கும் அவர்களைக் கடிந்து கொள்ளாமல் அளவில்லாத அன்பு செலுத்தினார்கள். இளவரசிகள் என்ன கேட்டாலும் பெற்றோர் உடனடியாகக் கொடுத்து விடுவார்கள். இளவரசிகள் அனைவரும் ஒரு பெரிய அறையில் ஒன்றாகத் தான்மேலும் படிக்க…

October Story

ஒரு காட்டில் சின்னு, சின்னு என்கிற சிட்டுக்குருவி வசித்து வந்ததாம். ரொம்ப சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் சிரித்துக் கொண்டே திரியும் சின்னுவைக் காட்டில் இருந்த எல்லா விலங்குகளுக்கும் ரொம்ப ரொம்பப் பிடிக்குமாம்மேலும் படிக்க…

Parambariya Kadhai

பல்லாண்டு காலமாக நாம் செவி வழியே கேட்டு வளர்ந்த சில பாரம்பரியக் கதைகளை இந்தத் தொடரில் என்னுடைய நடையில் தரப் போகிறேன்.மேலும் படிக்க…

Dogg

தாத்தா, தாத்தா, நம்ப பக்கத்து வீட்டு நாய் நிறையக் குட்டி போட்டிருக்கு இல்லையா? அந்தக் குட்டிங்க எல்லாம் கீ, கீன்னு சின்னக் குரலில கத்தறது குழந்தைங்க கத்தற  மாதிரியே இருக்கு எனக்குமேலும் படிக்க…