கனவின் வழி ஷிவானி மேற்கொள்ளும் மந்திரப் பயணங்களும், சாகச அனுபவங்களும், புரிதல்களும் சின்னக் கதைகளாக, இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.மேலும் படிக்க –>

“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகளை எழுப்பி,  அதற்கான அறிவியல் காரணங்களை, எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளமை, இத்தொகுப்பின் சிறப்பு.மேலும் படிக்க –>

‘தன் கையே தன் உதவி’, பதற்றம் நம் திறமையை மறக்கடிக்கச் செய்யும், பதற்றத்தில் நம் மூளை வேலை செய்யாது என்ற கருத்தைக் கொண்ட கதையிது.மேலும் படிக்க –>

கோவை தொண்டாமுத்தூர் உலியம்பாளையத்தைச் சேர்ந்த ஹரிவர்ஷ்னி ராஜேஷ். தம் ஒன்பதாவது வயதில், இந்தச் சிறுவர் கதை நூலை வெளியிட்டுள்ளார்.மேலும் படிக்க –>

இதில் குழந்தைகள் ரசிக்கக் கூடிய 10 கதைகள், இத்தொகுப்பில் உள்ளன. குழந்தைகளின் அன்பு நிறைந்த உலகை அற்புதமாய்ப் படம் பிடிக்கும் கதையிது.மேலும் படிக்க –>

தேன் மிட்டாய் சாப்பிட விரும்பும் சிறுவன் முகிலனுக்கு, அவனது அம்மா வாங்கிக் கொடுத்தாரா? முகிலனுக்கு அவனது நாய்க்குட்டி, தேன் மிட்டாய் சாப்பிட எப்படி உதவியது, தேனை விட சுவையான பண்டத்தை, காட்டில் முகிலனுக்கு யார் யாரெல்லாம் கண்டுபிடிக்க உதவினார்கள், அதன் சிறப்புகள் என, பல்வேறு தகவல்களின் களஞ்சியமாக, இந்நூலை ஆசிரியர் எழுதி உள்ளார்.மேலும் படிக்க –>

இதில் மந்திரவாதி மன்னர், சிரிக்கும் கரடி என இரண்டு கதைகள் உள்ளன முதலாவது பைலோரஷ்ய நாடோடிக்கதை. இரண்டாவது வடசோவியத் கதை.  இரினா ஸெலஸ்னோவா ஆங்கிலத்தில் எழுதிய இக்கதைகளைச் சரவணன் பார்த்தசாரதி, தமிழாக்கம் செய்திருக்கிறார்.மேலும் படிக்க –>

இந்நூலில் பறவைகளின் தமிழ்ப்பெயர்களும், நூலின் இறுதியில் அவற்றுக்கான ஆங்கிலப் பெயர்களும், கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் கூந்தங்குளம், வேடந்தாங்கல் போன்ற, பறவை சரணாலயங்கள் குறித்தும் இப்புத்தகம் பேசுகின்றது. சரணாலயங்கள் அமைந்துள்ள ஊர்களில் வாழும் மக்கள், பறவைகளைப் பாதுகாப்பதில் காட்டும் இயல்பான ஆர்வத்தையும் அக்கறையையும் குறித்து, ஆசிரியர் வியந்து பேசுகிறார்.
தமிழகப் பறவைகளின் பெயர்கள், அவற்றின் இயல்புகள், தோற்றம், சரணாலயங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள, வாசிக்க வேண்டிய புத்தகம். சிறுவர் முதல் பெரியவர் வரை, இயற்கையிலும், பறவை கூர் நோக்கலிலும் ஆர்வம் ஏற்படுத்த, உதவும் புத்தகம்.மேலும் படிக்க –>