குழந்தைகளே, இன்றைக்கு படங்களுக்கு வண்ணம் தீட்டுவதற்கு பதிலாக, காகித துண்டுகள் கொண்டு ஒட்டுவேலை முறையில் வண்ணம் தீட்டலாமா?
நான் இன்றைக்கு, ஒரு ஆப்பிள் வரைந்து, அதில், காகித ஒட்டு வேலை செய்து காண்பித்து இருக்கிறேன்.
காகிதங்களை ஒரே சீராகவும் வெட்டி ஒட்டு வேலை செய்யலாம். அல்லது, காகித துண்டுகளை சீரற்ற முறையில் கிழித்தும் ஒட்டு வேலை செய்யலாம். இப்படி சீரற்ற முறையில் ஒட்டுவேலை செய்ய, செய்தித் தாட்கள் நல்ல தேர்வாக இருக்கும்.
நான் கொலாஜ் முறையில் செய்த ஆப்பிள்.

முயற்சி செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் குழந்தைகளே.

பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில். தற்சமயம் மணமாகி, கடந்த பத்து ஆண்டுகளாக வசிப்பது அமெரிக்கா. கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு”. பள்ளி நாட்களில் தொடங்கிய கவிதை வாசிக்கும் ஆர்வம், கொஞ்சம் கொஞ்சமாக ஆசிரியர்கள், நண்பர்களின் தூண்டுதலோடு வளர்ந்து வருகிறது. வாசிக்க பிடித்திருந்தபடியால், எழுதிப் பார்க்க ஒரு ஆவலுடன் துவங்கிய எழுத்துப் பயணம், இன்று கதை, கவிதை, கட்டுரை என்று தொடர்ந்து வருகிறது.