இதழ் – 2 (Page 3)

Bheema

குட்டி பீமா தன் தங்கை மித்ராவுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு சின்னச் சண்டை ஏற்பட்டு விட்டது. பீமா கோபத்தில் பென்சிலைத் தூக்கி எறிய அதன் கூரிய முனை மித்ராவின் கண்களுக்கு அருகில் பட்டுவிட்டது. கண்களுக்கு அருகில் ஒரு சிறிய ரத்தக் காயம். அதுபோக கண்களும் சிவந்து விட்டன. பதறிப்போன அம்மாவும் அப்பாவும் மித்ராவை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். பீமா பின்னாலேயே ஓடிச் சென்றான்.  “டாக்டர்! பாப்பாவோட கண்ணுல தம்பி பென்சிலால்மேலும் படிக்க…

pachaikuthirai 1

விளையாட்டை முடித்துக் கொண்டு அண்ணா அக்கா உடன் சந்தோசமாக வீட்டிற்கு வந்த ஸ்ருதி, பெரியம்மாவை கட்டிக்கொண்டு, “பெரியம்மா இங்கே அண்ணா, அக்கா எல்லாரும் என்கூட ஜாலியா விளையாடறாங்க. எல்லாரும் நல்லா பழகுவாங்க, எனக்கு இங்கே ரொம்ப பிடிச்சிருக்கு பெரியம்மா, எல்லாருமே விளையாட வந்தாங்க” என்று கண்களில் ஆர்வம் மின்ன சொல்லிக்கொண்டிருந்தாள்.  “அப்படியா? ஸ்ருதிகுட்டி, இதுக்குப் போய் நீ காலைல அவ்ளோ வருத்தப்பட்டு ஊருக்கு போறேன்னு சொன்ன, உனக்கு என்ன தேவையோமேலும் படிக்க…

Neya Maayam

 ‘டொக் டொக்’ கதவைத் தட்டிய நேயா, சிறிது நேரம் காத்திருந்தாள். “உள்ளே வா!” ஓர் அழைப்புக் குரல் கேட்டது. யாரையும் காணவில்லை. அது, நிலா அத்தையின் குரல் இல்லை. வேறு யார் அழைத்திருப்பார்கள்? யோசனையில் ஆழ்ந்தாள் நேயா. கதவைத் திறந்து உள்ளே செல்லத் தயக்கம்.  நேயா, நிலா அத்தையைத்தான் தேடி வந்தாள். சென்ற விடுமுறை நாளன்று வந்து சென்ற அதே வீடுதான். வீடேதும் வேறு இடத்துக்கு மாறவில்லை. அதே இடத்தில்தான்மேலும் படிக்க…

dindigul 1

வணக்கம் பூஞ்சிட்டுகளே!! ஒவ்வொரு மாதமும் இந்த பகுதியில, நம்ம ஊருக்கு பேரு வந்த கதையைப் பத்தி தெரிஞ்சிட்டு இருக்கோம். அது போல இன்னிக்கு ‘கதை கதையாம் காரணமாம்’ பகுதில நாம   கதைக்கேக்கப் போற  ஊரு,  திண்டுக்கல்.  “ஆட்டுக்கல் பாறாங்கல் சரி அது என்ன திண்டுக்கல்?”ன்னு நீங்க சத்தமா யோசிக்கிறது எனக்கு நல்லாவே கேக்குது. ஒரு விதத்துல திண்டுக்கல்லுக்கும் கல்லுக்கும் பெரிய சம்பந்தம் இருக்கு. அது என்னன்னா, ஒரு  காலத்துல ஊருக்குமேலும் படிக்க…

Fruit Stall

அம்மா என்னை பழம் வாங்கி வரச் சொன்னாங்க. இந்த கடையில் என்னென்ன பழங்கள் இருக்கின்றன என்று கண்டுபிடித்து கமெண்ட்ஸ் பகுதியில் சொல்லுங்க குட்டீஸ்… அஜ்ஜி ராஜ்மேலும் படிக்க…

malaikottai

அரசர் வீரமகேந்திரர் பட்டத்தரசி எழினியிடம் மலைக்கோட்டை மாயாவியின் நிபந்தனையை எடுத்துச் சொன்னதுமே பட்டத்தரசி எழினி துடித்துப் போய் விட்டாள். “என்ன இது அநியாயம்? இரண்டு கண்களில் எந்தக் கண் வேண்டும் என்றால் என்ன சொல்ல முடியும்?”  தங்களுடைய கண்ணின் மணியான இளவரசியை மாயாவியிடம் தூக்கிக் கொடுக்கவும் தாய் மனதிற்கு விருப்பமில்லை. ஆனால் நாட்டு மக்களும் அவர்களுக்குக் குழந்தைகள் தானே! அவர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை இழந்து துயரத்தில் துடிப்பதையும் பார்த்துக்மேலும் படிக்க…

Hand art 1

குழந்தைகளே, உங்கள் கைச்சுவடுகளை அழகிய பறவை மற்றும் விலங்கு ஓவியங்களாக மாற்றுவோமா? குழந்தைகளின் கைகளை வெள்ளைத் தாளின் மீது வைத்து, அதனை பேனா அல்லது பென்சில் கொண்டு சுவடு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் தேவையான கண், மூக்கு, வாய், கால், இறகுகள் என நாம் வரைய விரும்பும் பறவை/விலங்கின் அடையாளங்களை வரைந்து கொள்ளலாம். இம்முறையில், யானை, மயில், வான்கோழி, ஆமை, குருவி, கோழி, மீன், குதிரை, வரிக்குதிரை இன்னும்மேலும் படிக்க…

maayavanam 2.4

அவ்வழகிய தேசம் நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்டு இருந்தது. ஆம், அத்தேசத்தின் வளமையைப் பெருக்க சகி நதி அழகிய தேசத்தை சுற்றி சூழ்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. அந்நாட்டின் பெயரும் சகி தான். ‘சகி’ என்றால் தோழி என்பது பொருள். சகி நாடும் நாட்டு மக்களும் மிகுந்த தோழமை உணர்வு உள்ளவர்கள்.  சகி நதியில் அழகழகான வஜ்ரா எனும் மீன்கள் காணப்பட்டன. அந்நாட்டிற்கு வறுமை என்பதே கிடையாது யாரும் எதையும் விளைவிக்கமேலும் படிக்க…

Birdy White BG

கீச் கீச் கீச்!  பூஞ்சிட்டு வந்திருக்கேன்! ஓடி வாங்க செல்லங்களே! கணிணியிலும்,தொலைக்காட்சியிலும் பாடம் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்க எல்லோருக்கும் சிட்டுவின் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்! இந்த இனிய நாளில், நம் நாட்டு விடுதலைக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்த தியாகிகளைப் போற்றி வணங்க வேண்டும்; போன மாதம் மாயக்கட்டம் சரியாகச் செய்து, விடையெழுதிய எல்லோருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.  கதைகளைப் படித்தீர்களா? பிடித்திருந்ததா?  கடி ஜோக்கைப் படித்துவிட்டுச் சிரித்தீர்கள் தானே? யாரெல்லாம்மேலும் படிக்க…

ada aamampa

புளூட்டோ கிரகமா இல்லையா? நித்யா, விழுப்புரம் பல காலமாகச் சூரியனைச் சுற்றும் கிரகங்களின் எண்ணிக்கை 9 என்றும் ஒன்பதாவது கிரகம் புளூட்டோ என்றும் சொல்லப்பட்டது.2006 ஆம் ஆண்டு வானியல் அறிஞர்கள் புளூட்டோ கிரகமல்ல; அது ஒரு குள்ளக் கிரகம் (Dwarf planet) என்று அறிவித்தனர்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் என்ன தெரியுமா? கிரகம் சூரியனை மையமாக வைத்த வட்டப்பாதையில், சூரியனைச் சுற்ற வேண்டும். கோள வடிவில் ஈர்ப்பு விசையுடன் இருக்கமேலும் படிக்க…