vidhai

ஒரே ஒரு ஊரிலே

ஒரே ஒரு மலையாம்

ஒரே ஒரு மலையிலே

ஒரே ஒரு மரமாம்

ஒரே ஒரு மரத்திலே

ஒரே ஒரு பழமாம் 

ஒரே ஒரு பழத்திலே

அவ்வளவு ருசியாம்

யாருக்கு அது கிடைக்குமுன்னு

ஊருக்குள்ள போட்டியாம்

தட்டிப்பறிச்சு அள்ளிப்போட

நின்னுச்சு ஒரு கூட்டமாம்

சண்டையிட்டா கிடைக்காது

கெடுத்துவிட்டா ஆகாது

தள்ளிவிடக்கூடாது

பகிர்ந்து தின்னா வம்பேது

பாடம் சொல்லுச்சு மரமாம்

ரசிச்சுக் கேட்டக்  கூட்டமும்

மனசு மாறி போனதாம்

பகிர்ந்து உண்ண நினைச்சுதாம்

பழமும் தானா விழுந்ததாம்

சனமும் ருசிச்சு தின்னதாம்

ஒண்ணே ஒன்னு இருந்தாலும்

பிரிச்சு கொடுத்து மகிழணும் 

நினச்சு பார்த்து வளரணும்

அன்பு மட்டும் விளையணும் 

நல்லதே நாளும் தொடரணும்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments