owl

அடர்ந்த காட்டின் நடுவிலொரு
ஆல மரம் இருந்ததாம்
அந்த மரப் பொந்திலொரு
ஆந்தை வசித்து வந்ததாம்

நாளெல்லாம் பொந்துக்குள்ளே
தூங்கித் தூங்கி எழுந்ததாம்
நள்ளிரவு நேரத்திலே
தூக்கம் கலைந்து விழித்ததாம்

பசி வயிற்றைக் கிள்ளவே
இரையைத் தேடிப் பறந்ததாம்
வயலோரத்து மரக்கிளையில்
அமர்ந்து நோட்டமிட்டதாம்

முட்டைக் கண்ணை உருட்டியே
உற்று உற்றுப் பார்த்ததாம்
வட்டத் தலையைச் சுழற்றியே
சுற்றுமுற்றும் பார்த்ததாம்

பயிரை அழிக்கும் எலிகளைப்
பாய்ந்து கவ்விப் பிடித்ததாம்
குண்டு பெருச்சாளிகளைக்
கூண்டோடு ஒழித்ததாம்.

வேட்டை முடிந்து போனதும்
காட்டுக்குத் திரும்பியதாம்
ஆலமரப் பொந்துக்குள்ளே
ஆனந்தமாய்த் தூங்கியதாம்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments