ஹாய் சிட்டூஸ்..
ஒரு சின்ன பரிசோதனை செய்து பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்
100மிலி சோடா/பெப்சி/கோக்/பேன்டா
100மிலி தண்ணீர்
காற்று போகாத மூடி உள்ள இரண்டு கொள்கலன்(கன்டெய்னர்)
இரண்டு அவித்த முட்டைகள்
எப்படி செய்வது:
ஒரு கொள்கலனில் 100மிலி சோடா போன்ற திரவத்தை ஊற்றுங்கள். அதில் ஒருமுட்டையை வைங்க. அதன் மூடியால் இறுக்கமாக மூடி வைக்க.
இன்னொரு கொள்கலனில் தண்ணீர் ஊற்றி, மற்றொரு முட்டையை வைங்க. மூடி கொண்டு மூடி வைக்க.
ஆறு மணி நேரம் கழித்து இரண்டு முட்டைகளையும் வெளியே எடுங்க.
சோடாவில் இருந்த முட்டையை உடைத்தால், அதன் தோல் மெலிதாகி, எளிதாக உடையும்.
தண்ணீரில் இருந்த முட்டை இயல்பான பலத்தோடு இருக்கும்.
ஏன் இப்படி?
சோடா ஒரு அமில திரவம். முட்டையில் இருக்கும் கால்சியம் அமிலத்தில் கரைந்திட, முட்டை ஓடு பலகீனமாகி விடும்.
அதனால் என்ன?
நாம் அதிகம் சோடா போன்ற திரவங்களைக் குடித்தால், அது நம் பற்களில் உள்ள கால்சியத்தைக் கரைக்கும். கிருமிகள் எளிதாக அரிக்கக் கூடியதாக நம் பற்கள் மாறிவிடும்.