வணக்கம் பூஞ்சிட்டுகளே! எல்லோரும் எப்படி இருக்கீங்க.. ஆன்லைனில் பாடம் படித்து, ஆன்லைனில் பரிட்சை எழுதி, அதற்கு காலாண்டு விடுமுறை கொண்டாடிய முதல் தலைமுறை நீங்கதான். காலரைத் தூக்கி விட்டுக்கோங்க.. இந்த வித்தியாசமான சூழ்நிலையில் உங்களுக்கு உற்றதுணையாய் பூஞ்சிட்டு இருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி! ஆசிரியர் தின ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட எல்லாக்  குட்டி ஓவியர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். பரிசினை தட்டிச் சென்ற சுட்டி ஓவியர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.  இந்தமேலும் படிக்க –>

நூல் : மாயக்கண்ணாடி ஆசிரியர் : உதயசங்கர் கண்ணாடிக்குள் 11 கதைகள் உள்ளது. ஒவ்வொன்றும் ராஜா கதைகள். சமகால அரசியல் நிகழ்வுகளைக் குழந்தைகளுக்குக் கதை மூலம் அழகாகச் சொல்கிறார். அதிகாரத்தின் கோமாளித்தனங்களைப் பற்றிய கதைகள். நம் அனைவருக்கும் ஒரு மாயக்கண்ணாடி இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க வைக்கிறார். இதன் அட்டைப்படத்தில் அழகிய சிறு கண்ணாடி ஒன்றையும் பதித்துள்ளார்கள். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் மாயக்கண்ணாடி. ஆசிரியர் குறிப்பு :மேலும் படிக்க –>

அன்று மாலை குழந்தைகள் அனைவரும் பூங்காவுக்கு வந்து சேரவும் சிட்டு பறந்து வரவும் சரியாக இருந்தது. “இன்னிக்கு எல்லாருமே ஒரே நேரத்துல வந்துட்டோம்” என்றாள் மலர். “எல்லாருக்கும் மாலை வணக்கம்! நல்லாயிருக்கீங்களா?” என்றது சிட்டு. “வணக்கம் சிட்டு! எல்லாரும் நல்லாயிருக்கோம்” என்றாள் கயல். குழந்தைகள் வழக்கம் போல் வட்டமாய் அமர்ந்து கொள்ள, சிட்டு கதை சொல்ல மேடையில் வந்து அமர்ந்தது. “போன வாட்டி டைனோசருக்கும், ஜூராசிக் பார்க்குன்னு படத்துக்குப் பேருமேலும் படிக்க –>

1. கொடுக்க முடியும், எடுக்க முடியாது. அது என்ன? 2. தலைக்குக் குடை, காலில் முள். அது என்ன? 3. ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம். அவன் யார்? 4. காகிதம் கண்டால் கண்ணீர் விடும், முக்காடு போட்டால் முனையில் அமரும். அது என்ன? 5. இவர்கள் இருவரும் சேர்ந்தால் ஒரு தலை உருளும், யார் இவர்கள் ? — பதில்கள் அடுத்த பக்கத்தில்மேலும் படிக்க –>

இப்போது நாம் பல கோடி வருடங்களுக்கு முன்,அதாவது பூமியில் மனிதர்கள் எல்லாம் உருவாகியதற்கு முந்தைய காலத்தில் இருக்கிறோம். அப்போது நம் நிலா இப்போது இருப்பதை விட இரண்டு மடங்கு பெரியதாகவும் இன்னும் பிரகாசமாகவும்‌ இருக்கும். (‘வாட்?’  என்றா கேட்கிறீங்க? அச்சோ!  நீங்க இன்னும் நம்ம கற்பனை உலகத்தில் குதிக்கலையா?)  நிலாவும் பூமியும் இப்போது போலவே அப்போதும்  இணைபிரியாத நண்பர்கள். நிலாவே அத்தனை அழகாக இருக்கும் போது பூமியைச் பற்றிச் சொல்லவாமேலும் படிக்க –>

ஒரு காட்டுக்குள் ஒரு மாயாஜால அரண்மனை இருந்தது. அந்த அரண்மனையில் இருந்த அனைத்துப் பொருட்களும் உயிருள்ள மனிதர்களைப் போல வாழும் சக்தியைக் கொண்டிருந்தன. அரண்மனையை விட்டு வெளியேறினால் அவற்றின் சக்தி மறைந்து சாதாரண பொருட்களாகிவிடும். அதே போல அரண்மனைக்குள் வேறு புது பொருட்கள் வந்தாலும் அவற்றிற்கும் உயிர் வந்துவிடும். அரண்மனைக்குள் இருந்து வரும் வினோத சத்தத்தின் காரணமாக, ஊர் மக்கள் அனைவரும் இதை பேய் அரண்மனை என்று நினைத்துக் கொண்டனர்.மேலும் படிக்க –>

வணக்கம் பூஞ்சிட்டுகளே! எல்லாரும் எப்படி இருக்கீங்க.. இந்த கொரோனா வந்ததும்  வந்தது! ஒரு இடத்துக்கும் போக முடியல.. அப்படியே போனாலும் முன்ன மாதிரி நிம்மதியா போய்ட்டு வர முடியல! பீச், பூங்கா, திரையரங்கம், நமக்கு பிடிச்ச கடைல நமக்கு பிடிச்ச சாப்பாடு இப்படி எல்லாத்தையுமே பழையபடி ரசிக்க கொஞ்சம் பீதியாத்தானே இருக்கு! அதுக்காக  அப்படியே  உக்கந்துர முடியுமா..! நம்ம  பூஞ்சிட்டு வழியா மாசாமாசம் நம்ம செல்ல வாண்டுக் கூட்டத்த ஒருமேலும் படிக்க –>

ஹாய் சுட்டீஸ்!  இந்த செப்டம்பர் மாதத்தில், நம்ம நாட்டில, ஆசிரியர்கள் தினம் கொண்டாடற மாதிரி, உலக அளவில இன்னொரு முக்கியமான நாளையும் கொண்டாடறாங்க, அது என்ன தெரியுமா?  செப்டம்பர் 16 – சர்வதேச ஓசோன் தினம் ஓசோன் படலம் என்பது நமது பூமியை போர்த்தியிருக்கும் ஒரு மெல்லிய வாயுப் படலமாகும். ஓசோன் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஓசோனைப் பாதுகாக்க ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் தேதியை ஓசோன்மேலும் படிக்க –>

“பாட்டி! பாட்டி! இன்னிக்கு சண்டே இல்லே, காலைலே என்ன டிபன் பண்ணப் போறீங்க பாட்டி?” “உனக்கு வெஜ் ஆம்லெட் பண்ணித் தரவா கண்ணா!” “இதுல என்ன எல்லாம் போட்டுப் பண்ணுவீங்க பாட்டி?” “வா! நாம ரெண்டு பேரும் சேர்ந்தே பண்ணலாம்! என்ன சரியா?” “ஓகே பாட்டி! வாங்க செய்யலாம்!” “முதல்ல 2 கப் கோதுமை மாவு எடுத்து இந்தப் பாத்திரத்தில போடு!” “டன்! அடுத்து? ஒவ்வொண்ணா சொல்லுங்க பாட்டி, நான்மேலும் படிக்க –>