வண்ணம் தீட்ட தூரிகைகள் (paint brush) பயன்படுத்தி இருப்போம். நாம் பல் துலக்க பயன்படுத்தும் தூரிகைகள் (tooth brush) கொண்டு கூட வண்ணம் தீட்டலாம். இப்போ நாம் வண்ணம் தீட்ட போறதில்லை. வண்ணங்களை தெளிக்க போறோம். அதை ஆங்கிலத்தில் splatter painting என்று சொல்லுவாங்க. பற்தூரிகை கொண்டு எப்படி இந்த படத்தை நாம் தீட்ட போகிறோம் என்று பார்க்கலாமா ? தேவையான பொருட்கள் : நகல் எடுக்க உதவும் உள்வெட்டுமேலும் படிக்க –>

பல கோடி வருடங்களுக்கு முன்பு, நம் பூமியில் செடிகள், கொடிகள், மரங்கள் இவற்றின் தண்டுகள், இலைகள், பூக்கள், காய்கள், பழங்கள் தவிர மற்ற   அனைத்தும் அதாவது நீந்தும், ஊர்ந்து செல்லும், பறக்கும், நடக்கும், துள்ளிச்செல்லும் விலங்குகள் அனைத்தும் கறுப்பு வெள்ளை நிறத்தில்தான் இருந்தன!!  நம் கண்களில் வெள்ளைப் பின்புலத்தில் கருவிழிகள் உள்ளதல்லவா,  அதுபோலத்தான் எல்லா உயிரினங்களும் இருக்கும்.  (என்னது!! ஏற்கனவே  கற்பனை உலகத்திற்கு வந்து விட்டீர்களா? சமத்துக் குட்டிஸ்!!!) நிறங்கள்மேலும் படிக்க –>

பொக்கிஷத்தைத் தேடி.. இன்னிக்கு என்ன விளையாட்டு சொல்லித் தரலாம் இந்த சுட்டிப் பசங்களுக்கு.. என்று யோசனை செய்தபடி அமர்ந்திருந்தார் பட்டாபி தாத்தா.  “பலமான யோசனையில இருக்கீங்க போல.. என்ன விஷயம்?” என்று கேட்டுக் கொண்டே காபி எடுத்து வந்து தாத்தாவிடம் கொடுத்தாள் பார்வதி பாட்டி.  “ம்.. இந்த சுட்டிப் பசங்க கிட்ட புதுசா ஒரு விளையாட்டு விளையாடலாம்னு சொல்லிட்டேன்.. என்ன விளையாடலாம்னு யோசிக்கறேன்.. இந்த லாக்டவுன்ல பசங்களோட சேஃப்டி ரொம்பமேலும் படிக்க –>

முன்னொரு காலத்தில், விடிகாலையில் மேகங்கள் எல்லாம் ஆரஞ்சு  நிறமாகும்படியாக, சூரியன் மலை மேல் அப்போது தான் ஏறத்துவங்கி இருந்தான். ஒரு குட்டிக் குழந்தை அழகான வெள்ளைப் படுக்கையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது. ‘கண் விழித்து, எழுந்திரு, எழுந்திரு,’ என்று கடிகாரம் டிக் டிக் என்று குரல் எழுப்பியது.  ஆனால் குழந்தைக்குத் தூக்கத்தில் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. சன்னலுக்குப் பக்கத்தில் இருந்த மரத்தில் வாழ்ந்த ஒரு குருவி,  “நான் அவனைமேலும் படிக்க –>

அன்று மிகவும் சோர்வாக இருந்தாள் சிவானி. பள்ளியில் இன்று அவளது தேர்வு முடிவுகள் சொல்லப்பட்டன. சில பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் சிலவற்றில் மிகக் குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தாள். ஓரிரு பாடங்களில் தேர்ச்சி அடையவில்லை. சிவானி மிக நல்ல குழந்தை தான். நன்றாக வரைவாள். அழகாகப் பாடுவாள். ஆனால், பாடங்கள் மட்டும் கொஞ்சம் கடினமாகவே இருக்கும் அவளுக்கு. ஆனால், எப்போதும் அவள் தேர்ச்சியடையாமல் இருந்ததில்லை. இன்றோ பாடத்தில் தோல்வியைத் தழுவியதும்மேலும் படிக்க –>

குழந்தைகளே! பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம். இம்மாதம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பறவையின் பெயர் கொண்டைக்குருவி – (RED VENTED BUL BUL) இதற்குச் சின்னான் என்ற பெயரும் உண்டு. தலை கறுப்பாகவும், வாலுக்கடியில் சிவப்பாகவும் இருக்கும்.  கொண்டை சற்று உயர்ந்து காணப்படும். வாலுக்கடியில் இருக்கும் சிவப்பு தான், இதன் முக்கிய அடையாளம். உடலின் நிறம் கரும்பழுப்பாகவும், செதில் செதிலாகவும் தோன்றும். இதன் கொண்டையையும், வாலுக்கடியில் உள்ள சிவப்பையும் கொண்டு,மேலும் படிக்க –>

எலேய் மக்கா!  யல்லாரும் சவுக்கியமா இருக்கீகளா..! என்ன அப்படி பாக்குதீக..? ஊருக்கு  பேரு வந்த கத மட்டும் தெரிஞ்சிக்கிட்டா போதுமா.. ஊரு பாஷ பேசணும்ல.. அதேன்.. என்ன இன்னுமா எந்த ஊருன்னு தவிக்கீக? அட..! கிடந்து சலம்பாதீக புள்ளைகளா!! இன்னிக்கு நாம கத கதயாம் காரணமாம்’ல கத கேக்கப் போற ஊரு.. ஊரு.. ஆ.. அவ்வளவு லேசுல ஊருப்பேரை சொல்லிடுவேனா..! இந்தா ஒரு விடுகத போடுதேன்.. விடெ கண்டுப்பிடிக்கீகளான்னு பாப்போம்!மேலும் படிக்க –>

அப்பா ஏதோ புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார். அவரை நெருங்கிய  விஸ்வா அவர் படிப்பதை எட்டிப்பார்த்தான். “என்ன கண்ணா?” என்றார் அப்பா. “எனக்கும் ஏதாவது புத்தகம் தாங்க. படிக்கறேன்” என்றான் விஸ்வா. அவன் அப்படி சொன்னதும் அப்பாவுக்கு முகமெல்லாம் மகிழ்வான சிரிப்பு படர்ந்தது. எழுந்தவர் அவரது அலமாரியில் தேடி ஒரு புத்தகம் எடுத்துத்தந்தார். அதில் கட்டம் கட்டமாக போட்டு படங்கள் வரையப்பட்டிருந்தன. “இதென்னப்பா… படமா இருக்கு. நீங்க படிக்கறது எழுத்தா இருக்கு” “அதுவந்துமேலும் படிக்க –>

சுட்டீஸ்! இந்த அக்டோபர் மாதத்தில் நம் நாட்டில் மிகச் சிறப்பான தினம் ஒன்றைக் கொண்டாடுகிறோம். அது என்னவென்று பார்க்கலாமா? October 8 இந்திய விமானப்படை தினம். Indian Airforce Day இந்திய வான்படை அல்லது இந்திய விமானப் படை (IAF, Bhartiya Vayu Sena) இந்தியப் பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது.மேலும் படிக்க –>