அருணனைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு, துருவனும் அவனுடைய நண்பர்களும் வனத்திற்குள் வருணனையும் குரங்குகளையும் தேடிக் கொண்டு சென்றார்கள்.மேலும் படிக்க –>

துருவனும் அவனுடைய நண்பர்களும் காவல் வீரர்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள்,”எப்படியாவது மலையில் ஏற ஆரம்பிக்க வேண்டும். அவர்களுடைய மனதில் இரண்டு யோசனைகள் தோன்றின. மேலும் படிக்க –>

ஒரு பெரிய வனம் இருந்தது. அந்த வனத்துக்குள்ளே ஒரு நாள் விலங்குகள், பறவைகள் எல்லாமே கூட்டம் கூட்டமாக ஏதோ பேசிக்கிட்டே இருந்தாங்க. என்ன பிரச்சினையா இருக்கும்? வாங்க, நாம போயிக் கண்டுபிடிக்கலாம். மேலும் படிக்க –>

சித்திரக்குள்ளன் தனது கதையை துருவனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் சொல்ல ஆரம்பித்தான். இங்கிருந்து வெகு தூரத்தில் எங்களுடைய தேசம் இருக்கிறது‌. சித்திக்குள்ளர்களின் தேசமான சித்ரபுரி தான் எனது தேசம். நான் அந்த தேசத்தின் இளவரசன். என்னுடைய பெயர் அபூர்வன். என்னுடைய தாய், தந்தையருக்கு நான் ஒரே மகன் என்பதால் எல்லோருக்கும் அதிக செல்லம். கண்டிப்பே இல்லாமல் வளர்ந்ததால் குறும்புத்தனமும் என்னிடம் மிகவும் அதிகமாக இருந்தது. வளர‌வளர எனக்கு இளவரசன் என்ற அகந்தையும்மேலும் படிக்க –>

கருணா அவர்கள் வீட்டின் இளவரசி. அவளோட அம்மா, அப்பாவிற்கு ஒரே மகள். ரொம்பச் செல்லம். ஆனாலும் கருணா  ரொம்ப நல்ல பொண்ணு தான். பெரியவங்க கிட்ட மரியாதையா நடந்துக்குவா‌. சொன்ன பேச்சைக் கேப்பா. அப்புறம் எல்லோருக்கும் தானாவே உதவி செய்வா. அதுனாலயே அவளை எல்லோருக்கும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். கருணாவோட பாட்டி அவங்க வீட்டிலயே அவங்க கூடத்தான் இருந்தாங்க. அதுனால கருணா பாட்டிக்கும் செல்லம் தான். அவளுக்கும் பாட்டியை ரொம்பமேலும் படிக்க –>

அணிலைக் கண்டு சிரித்ததற்காக உண்மையில் மனம் வருந்தினான் துருவன். “அணில் தம்பி. என்னை மன்னித்து விடப்பா. ‘உருவம் கண்டு எள்ளாமை‌ வேண்டும்’ என்ற சொற்களின் முழு உண்மையையும் இன்று நான் புரிந்து கொண்டேன். உன்னுடைய சிறப்பான தகுதியின் முன்னால் நான் தான் இன்று சிறியவனாக உணர்கிறேன். உங்கள் மூவரின் உதவியுடன் நிச்சயமாக நான் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றி பெறுவேன். நாம் விரைந்து கிளம்பலாம். எண்ணிய கருமத்தை உடனடியாக நிறைவேற்றுவதேமேலும் படிக்க –>

“குமரா, ஸ்கூல் பஸ் வர டயம் ஆச்சு. இன்னுமா ரெடியாகலை நீ? ராகவி, அவனோட ஸ்கூல் பேக்கில லஞ்ச் பாக்ஸ் வச்சுட்டயா?” என்று மகன் குமரனையும் மனைவி ராகவியையும் ஒரே சமயத்தில் கேள்விகள் கேட்டார் மகேந்திரன். “இதோ ரெடியாயிட்டேன்பா” என்று சொல்லிக் கொண்டே யூனிஃபார்ம் அணிந்த குமரன், மகேசன் எதிரே வந்து நின்றான். ராகவியும் கையில் லஞ்ச்பாக்ஸைக் கொண்டு வந்து குமரன் கையில் தர, அவனும் அதை பேக்கில் வைத்துக்மேலும் படிக்க –>

ஒரு சிறிய கிராமத்தில் ‌ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் இருந்த விளைநிலத்தில் விவசாயியால் தனது விவசாயத் தொழிலை சரிவரச் செய்ய முடியவில்லை. மழை பொய்த்து விட்டது. விதை நெல் வாங்குவதற்கும் கையில் பணவசதி இல்லை. ஊரில் இருந்த செல்வந்தர்களிடம் உதவி கேட்டும் யாரும் அவனுக்கு உதவி செய்யவில்லை. அவனும் அவனது குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள். வயதான பெற்றோர், கனிவும் அன்பும் கொண்ட மனைவி, சிறு குழந்தைகள் அனைவரும்மேலும் படிக்க –>

அடுத்து வந்த சில நாட்களில் துருவனின் பயிற்சி முழுமை பெற்றது. முழுமை என்றால் நன்றாக அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தான் என்று அர்த்தமில்லை. கௌதம முனிவருக்கு இந்தக் குறுகிய காலத்தில் அனைத்துப் பயிற்சிகளையும் கற்றுத் தருவது கடினம் என்பது நன்றாகத் தெரியும். எவ்வளவு நல்ல மாணவனாக இருந்தாலும் எல்லாக் கலைகளையும் முழுமையாகக் கற்றுத் தேர்ச்சி பெறப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். அதனால் மிகவும் அவசியமான பயிற்சியை மட்டுமே ஆசான் துருவனுக்குமேலும் படிக்க –>

கருணை ததும்பும் அந்த முனிவர் பேசியதைக் கேட்டுத் திகைத்துப் போய் நின்ற துருவன் தன்னை ஒருவழியாகச் சமாளித்துக் கொண்டு அந்த முனிவரைப் பணிவுடன் வணங்கினான். அறிவும் ஞானமும் சேர்ந்து ஒளி வீசுகின்ற முனிவரின் முகத்தைக் கண்டதுமே துருவனின் மனதில் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் சேர்ந்து எழுந்தன. “அரசர், நம்மை ஒரு சரியான குருவிடம் தான் அனுப்பியிருக்கிறார். இவருடைய சொற்களைக் கேட்டுக் குறுகிய காலத்தில் நம்மால் முடிந்த அளவு கலைகளைக் கற்றுக் கொண்டுமேலும் படிக்க –>