பல வருடங்களுக்கு முன் ஒரு குளிர்சாதனப் பெட்டியில் அதாவது ஃப்ரிட்ஜ்ஜில்  தக்காளி, முட்டை, வெங்காயம், ஐஸ்கிரீம் நான்கு பேரும் நண்பர்களாக இருந்தாங்க. சூப்பர் மார்க்கெட்டின் மரப்பலகையில் இருந்ததிலிருந்தே நால்வரும் நண்பர்கள்தான். (பல வருடங்களுக்கு முன்னாடி ஃப்ரிட்ஜா? அதெப்படின்னு கேக்குறீங்களா.. நோ..நோ.. “அதெப்படி?” என்று கேட்காமல் “அப்படியா!”என்ற ஆச்சர்யத்தோடு நம் கற்பனை உலகத்தில் தொபுக்கடீர்னு குதிச்சிடுங்க. ஓகே?) அந்த நால்வரில் வெங்காயம்தான் கொஞ்சம் விவேகமானவன்.  அன்று இரவு நால்வரும் பேசிக்கொண்டிருந்த போது, மேலும் படிக்க –>

அதிகாலைச் சூரியன் சாளரத்தின் வழியே தூங்கும் பூக்குவியலின் மேல் பட்டது. வெளிச்சத்தின் தாக்கத்தால் தூக்கம் கலையவும் சிணுங்கியபடியே அழைத்தாள் தன் தாயை.  “ம்மா.. ம்மா.. வெயில் போகச் சொல்லு…”, என தூக்கத்தில் உளறினாள்.  “என் தங்கக்கட்டிக்கு இன்னும் தூக்கம் தெளியலியா?”, எனக் கூறியபடியே தாயவள் சாளரத்தை நன்றாகத் திறந்து விட்டாள். காலைக் காற்றும், ஒளியும் அறை முழுக்க பரப்ப திரைச்சீலைகளை விலக்கிக் கட்டினாள்.  “ம்மா….. வெயில் போ சொல்லு…. தூக்கம்மேலும் படிக்க –>

 ‘டொக் டொக்’ கதவைத் தட்டிய நேயா, சிறிது நேரம் காத்திருந்தாள். “உள்ளே வா!” ஓர் அழைப்புக் குரல் கேட்டது. யாரையும் காணவில்லை. அது, நிலா அத்தையின் குரல் இல்லை. வேறு யார் அழைத்திருப்பார்கள்? யோசனையில் ஆழ்ந்தாள் நேயா. கதவைத் திறந்து உள்ளே செல்லத் தயக்கம்.  நேயா, நிலா அத்தையைத்தான் தேடி வந்தாள். சென்ற விடுமுறை நாளன்று வந்து சென்ற அதே வீடுதான். வீடேதும் வேறு இடத்துக்கு மாறவில்லை. அதே இடத்தில்தான்மேலும் படிக்க –>

ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் தன் வகுப்பு நண்பன் யஸ்வந்தோடு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நான்காம் வகுப்பு படிக்கும் ப்ரியா அழுதுகொண்டே, தன் அம்மாவிடம் வந்து முறையிட்டாள். “அம்மா..  யஸ்வந்த் என்னை ஹிந்திலயே திட்றான் மா! திட்டிட்டு என்னப் பாத்துப் பாத்து சிரிக்கிறான் வேற மா!”, என்று விசும்பினாள் ப்ரியா. மடிக்கணினியில் ஏதோ வேலையாயிருந்த ப்ரியாவின் அம்மா திவ்யா, “நீ முதல்ல  அழாதே. எதுக்கு உன்ன திட்டினான்? யஸ்வந்தும் நீயும் நல்லமேலும் படிக்க –>

இரண்டு செண்ட்டில்  அழகாகப் பார்த்து, பார்த்துக் கட்டியிருந்த வீடு அது… கதிரவனுக்கு எப்போதும் அந்த வீட்டின் மேல் அத்தனை பெருமை. சொந்தமாக உழைப்பில் வாங்கியது அல்லவா… சில நேரம் மகிழ்ச்சியாக, சில நேரம் சத்தமாக, சில நேரம் அமைதியாக எனக் கலவையான மனிதர்களின் மனநிலையைப்  பிரதிபலிக்கும் வீடு அது. கதிரவன், பூர்ணா இருவரின் செல்ல மகன் குரு பிரசாத். ஆறாம் வகுப்பு மாணவன். படிப்பில் படு சுட்டி… விளையாட்டு, ஓவியம்மேலும் படிக்க –>

பள்ளி முடிந்து வெளியில் வந்து பார்த்த வேலன் தன் தங்கை ஜோதியைக் காணாமல் பள்ளி முழுவதும் சுற்றி வந்தான். எங்கேயும் காணாமல் போகவே அவனுக்குப் பயம் அதிகரித்தது. ஏற்கெனவே அழுது கொண்டிருந்தவனுக்கு, இப்பொழுது இன்னும் அழுகை அதிகமானது. எல்லா மாணவர்களும் சென்றிருக்க, ஒவ்வொரு ஆசிரியர்களாக வெளியில் வந்தார்கள். வேலன் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த அவனுடைய வகுப்பு ஆசிரியை தேவி, “என்ன வேலன் இன்னும் வீட்டிற்குப் போகலையா?, ஏன் அழுகிறாய்?” என்றார். அவரைப்மேலும் படிக்க –>