கதைத்தோட்டம் (Page 16)

Muthu Muthai

இப்போது நாம் பல கோடி வருடங்களுக்கு முன்,அதாவது பூமியில் மனிதர்கள் எல்லாம் உருவாகியதற்கு முந்தைய காலத்தில் இருக்கிறோம். அப்போது நம் நிலா இப்போது இருப்பதை விட இரண்டு மடங்கு பெரியதாகவும் இன்னும் பிரகாசமாகவும்‌ இருக்கும். (‘வாட்?’  என்றா கேட்கிறீங்க? அச்சோ!  நீங்க இன்னும் நம்ம கற்பனை உலகத்தில் குதிக்கலையா?)  நிலாவும் பூமியும் இப்போது போலவே அப்போதும்  இணைபிரியாத நண்பர்கள். நிலாவே அத்தனை அழகாக இருக்கும் போது பூமியைச் பற்றிச் சொல்லவாமேலும் படிக்க…

kannadi

ஒரு காட்டுக்குள் ஒரு மாயாஜால அரண்மனை இருந்தது. அந்த அரண்மனையில் இருந்த அனைத்துப் பொருட்களும் உயிருள்ள மனிதர்களைப் போல வாழும் சக்தியைக் கொண்டிருந்தன. அரண்மனையை விட்டு வெளியேறினால் அவற்றின் சக்தி மறைந்து சாதாரண பொருட்களாகிவிடும். அதே போல அரண்மனைக்குள் வேறு புது பொருட்கள் வந்தாலும் அவற்றிற்கும் உயிர் வந்துவிடும். அரண்மனைக்குள் இருந்து வரும் வினோத சத்தத்தின் காரணமாக, ஊர் மக்கள் அனைவரும் இதை பேய் அரண்மனை என்று நினைத்துக் கொண்டனர்.மேலும் படிக்க…

thedal

“பூர்ணிமா காய்கறி வாங்க மார்கெட் வரைக்கும் போகனும். கூட வரமுடியுமா? நீயும் வாங்கனும்ன்னு சொன்னாயே…”, அடுத்த வீட்டுப்பெண் பூர்ணிமாவிடம் கேட்டாள். “அக்கா மதியம் போகலாமா? சாராவைத் தூங்க வச்சிட்டு வரேன்”. சாரா, ஐந்து வயது மகள். நிறைய துறுதுறுப்போடு.. மழலை மாறாமல் இருக்கும் பூஞ்சிட்டு… இவர்கள் வசிப்பது கோவை செல்வபுரம் பகுதியில்… சொந்த வீடு இரண்டு செண்ட்டில், சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எழுப்பி இருக்க, எப்போதும் பரபரப்பாக இருக்கும் பகுதிமேலும் படிக்க…

karunai ullam1

ஆதித்யா தாத்தா பாட்டியைப் பார்த்து உற்சாகத்தில் குதித்தான். குழந்தைகளுக்கே தாத்தா பாட்டி வந்தால் சந்தோஷம் தான். அவர்கள் ஆதித்யாவின் தந்தை அருணனின் பெற்றோர். சென்னை வாழ்க்கை பிடிக்காமல் கிராமத்தில் வசிக்கிறார்கள். இப்போது ஊரடங்கு கொஞ்சம் தளர்த்திய சமயம் அவர்கள் சென்னைக்குக் கிளம்பி வந்தார்கள். ஆதித்யா அவர்களுக்குச் செல்லப் பேரன்.  ஆதித்யா சென்னையின் பிரபல தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பில் படிக்கிறான். “செல்லக் குட்டி, உனக்கு என்னடா வேணும்?” என்று தாத்தாமேலும் படிக்க…

aamaiyum vaathum

ஒரு குளத்தில், ஓர் ஆமையும், இரண்டு வாத்துகளும் நண்பர்களாகப் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தன..  ஒரு சமயம், மழையே பெய்யாமல், குளம் வறண்டு, முற்றிலுமாகக் காய்ந்து விட்டது. “நாம சீக்கிரமா வேறு இடம் தேடிப் போகணும்; தண்ணி இல்லாம  நம்மால வாழமுடியாது.  ஆமைக்கு டாட்டா சொல்லிட்டு, ஒடனே இங்கேர்ந்து கெளம்பணும்,” என்று ஒரு வாத்து, இன்னொரு வாத்திடம் சொன்னது. வாத்து சொன்னதைக் கேட்ட ஆமை, “என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க; என்னையும்மேலும் படிக்க…

Appadiya

பல வருடங்களுக்கு முன் ஒரு குளிர்சாதனப் பெட்டியில் அதாவது ஃப்ரிட்ஜ்ஜில்  தக்காளி, முட்டை, வெங்காயம், ஐஸ்கிரீம் நான்கு பேரும் நண்பர்களாக இருந்தாங்க. சூப்பர் மார்க்கெட்டின் மரப்பலகையில் இருந்ததிலிருந்தே நால்வரும் நண்பர்கள்தான். (பல வருடங்களுக்கு முன்னாடி ஃப்ரிட்ஜா? அதெப்படின்னு கேக்குறீங்களா.. நோ..நோ.. “அதெப்படி?” என்று கேட்காமல் “அப்படியா!”என்ற ஆச்சர்யத்தோடு நம் கற்பனை உலகத்தில் தொபுக்கடீர்னு குதிச்சிடுங்க. ஓகே?) அந்த நால்வரில் வெங்காயம்தான் கொஞ்சம் விவேகமானவன்.  அன்று இரவு நால்வரும் பேசிக்கொண்டிருந்த போது, மேலும் படிக்க…

Iyarkai

அதிகாலைச் சூரியன் சாளரத்தின் வழியே தூங்கும் பூக்குவியலின் மேல் பட்டது. வெளிச்சத்தின் தாக்கத்தால் தூக்கம் கலையவும் சிணுங்கியபடியே அழைத்தாள் தன் தாயை.  “ம்மா.. ம்மா.. வெயில் போகச் சொல்லு…”, என தூக்கத்தில் உளறினாள்.  “என் தங்கக்கட்டிக்கு இன்னும் தூக்கம் தெளியலியா?”, எனக் கூறியபடியே தாயவள் சாளரத்தை நன்றாகத் திறந்து விட்டாள். காலைக் காற்றும், ஒளியும் அறை முழுக்க பரப்ப திரைச்சீலைகளை விலக்கிக் கட்டினாள்.  “ம்மா….. வெயில் போ சொல்லு…. தூக்கம்மேலும் படிக்க…

Neya Maayam

 ‘டொக் டொக்’ கதவைத் தட்டிய நேயா, சிறிது நேரம் காத்திருந்தாள். “உள்ளே வா!” ஓர் அழைப்புக் குரல் கேட்டது. யாரையும் காணவில்லை. அது, நிலா அத்தையின் குரல் இல்லை. வேறு யார் அழைத்திருப்பார்கள்? யோசனையில் ஆழ்ந்தாள் நேயா. கதவைத் திறந்து உள்ளே செல்லத் தயக்கம்.  நேயா, நிலா அத்தையைத்தான் தேடி வந்தாள். சென்ற விடுமுறை நாளன்று வந்து சென்ற அதே வீடுதான். வீடேதும் வேறு இடத்துக்கு மாறவில்லை. அதே இடத்தில்தான்மேலும் படிக்க…

Mango

ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் தன் வகுப்பு நண்பன் யஸ்வந்தோடு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நான்காம் வகுப்பு படிக்கும் ப்ரியா அழுதுகொண்டே, தன் அம்மாவிடம் வந்து முறையிட்டாள். “அம்மா..  யஸ்வந்த் என்னை ஹிந்திலயே திட்றான் மா! திட்டிட்டு என்னப் பாத்துப் பாத்து சிரிக்கிறான் வேற மா!”, என்று விசும்பினாள் ப்ரியா. மடிக்கணினியில் ஏதோ வேலையாயிருந்த ப்ரியாவின் அம்மா திவ்யா, “நீ முதல்ல  அழாதே. எதுக்கு உன்ன திட்டினான்? யஸ்வந்தும் நீயும் நல்லமேலும் படிக்க…

maatram

இரண்டு செண்ட்டில்  அழகாகப் பார்த்து, பார்த்துக் கட்டியிருந்த வீடு அது… கதிரவனுக்கு எப்போதும் அந்த வீட்டின் மேல் அத்தனை பெருமை. சொந்தமாக உழைப்பில் வாங்கியது அல்லவா… சில நேரம் மகிழ்ச்சியாக, சில நேரம் சத்தமாக, சில நேரம் அமைதியாக எனக் கலவையான மனிதர்களின் மனநிலையைப்  பிரதிபலிக்கும் வீடு அது. கதிரவன், பூர்ணா இருவரின் செல்ல மகன் குரு பிரசாத். ஆறாம் வகுப்பு மாணவன். படிப்பில் படு சுட்டி… விளையாட்டு, ஓவியம்மேலும் படிக்க…