விடுகதை – 6
1. மண்ணுகுளே கிடப்பான் , மங்களகரமானவன் அவன் யார்? 2. தொப்பி போட்ட காவல்காரன், உரசி விட்டால் சாம்பல் ஆவான். அவன் யார்? 3. ஊர் சுற்ற கூட வருவான் ஆனால் வீட்டுக்குளே வரமாட்டன். அவன் யார்? 4. ஏழு குதிரை பூட்டிய தேரில் வரும் மன்னவன். அவன் யார்? 5. தொட்டு விட்டால் ஏதும் இல்லை அரைத்து விட்டால் சிவந்துடுவான். அவன் யார்? பதில்கள் அடுத்தப் பக்கத்தில்…மேலும் படிக்க –>
மாயக்கட்டம் – 6
இந்தக் கட்டத்திற்குள் பல தமிழ் வார்த்தைகள் மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ, இடமிருந்து வலமாகவோ, வலமிருந்து இடமாகவோ ஒளிந்து இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து கீழே உள்ள கமெண்ட்ஸில் பதிவிடவும்.மேலும் படிக்க –>
விடுகதை – 4
1. கொடுக்க முடியும், எடுக்க முடியாது. அது என்ன? 2. தலைக்குக் குடை, காலில் முள். அது என்ன? 3. ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம். அவன் யார்? 4. காகிதம் கண்டால் கண்ணீர் விடும், முக்காடு போட்டால் முனையில் அமரும். அது என்ன? 5. இவர்கள் இருவரும் சேர்ந்தால் ஒரு தலை உருளும், யார் இவர்கள் ? — பதில்கள் அடுத்த பக்கத்தில்மேலும் படிக்க –>
விடுகதை – 3
1. உயரப் பறப்பவனுக்கு வால் உண்டு, கால் அல்ல. அவன் யார்? 2. உருண்டைத் தலையனுக்கு உடம்பெல்லாம் மஞ்சள் போர்வை. அவன் யார்? 3. ஒத்தைக்கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை, அது என்ன 4. கை பட்டதும் சிணுங்குவான், கதவு திறந்தால் அடங்குவான். அவன் யார்? 5. முப்பத்திரெண்டு சிப்பாய், நடுவே மகராசா, அவர்கள் யார்? — பதில்கள் அடுத்த பக்கத்தில்மேலும் படிக்க –>
நா காக்க
வணக்கம் பூஞ்சிட்டுகளே! போன மாசம் முழுக்க ரிவிஷன் எக்ஸ்சாம்ன்னு ஆன்லைன் கிளாஸ உத்து உத்து பார்த்து நம்ம கண்ணும்… முதுகு உடைய உக்காந்து நம்ம முதுகு , வலிக்க வலிக்க எழுதி நம்ம கையும் படாத பாடு பட்டிருக்குமே! ஆனா இந்தா நாக்கு மட்டும் ஜாலியா இருக்குல்ல..?! அத உருட்டி மிரட்டி பிரட்டி கொஞ்சம் கலாட்டா பண்ணுவோமா.. குட்டீஸ்..?! நீங்க செய்ய வேண்டியதெல்லாம்.. கீழ நாங்க கொடுத்திருக்க சொற்களை வேகமா மேலும் படிக்க –>