ஒருமுறை, முயல்கள்  தங்கள் வாழ்வில் படும் கஷ்டங்களைப் பற்றிப் பேசுவதற்காக ஒரு கூட்டம் போட்டன. “எப்பவுமே நம்மளைச் சாவைக் காட்டிப் பயமுறுத்திக்கிட்டே இருக்காங்க.  மனுஷன்லேர்ந்து நாய், கழுகு, நரி வரைக்கும் நம்மளைப் பயத்திலேயே வைச்சிருக்காங்க.  நமக்கு மகிழ்ச்சிங்கிறதே சுத்தமா இல்ல.  அதுக்குப் பேசாம உடனடியா நாம செத்துப் போயிடுறது நல்லது” என்று அந்தக் கூட்டத்தில், முயல்களின் தலைவன் சொன்னது. “ஆமாம்.  எப்பப் பார்த்தாலும், ஏதாவது நம்மளைப்  பயமுறுத்திச் சோகமா ஆக்குது. மேலும் படிக்க –>

டூடுல் ஆர்ட் கொரானா காரணமாக அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் பெருமளவு தளர்த்தப்பட்டதால், குடியிருப்புவாசிகள் பலர் கிறிஸ்துஸ், புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டங்களுக்காகத் தங்கள் சொந்த ஊர் கிளம்பிச் சென்றுவிட, குடியிருப்பில் மிகக் குறைவானவர்களே இருந்தார்கள்.  அதிலும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்க, சுட்டி மித்து தன் நண்பர்களை ரொம்பவே மிஸ் செய்தான்.  “பட்டு! என் ஃப்ரண்ட்ஸ் யாரும் இங்க இல்ல! உங்க வீட்டுக்கும் வரக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க! செம்மையாமேலும் படிக்க –>

ஷிவானி தன்னோட அப்பா அம்மா பாட்டி தாத்தாவோட பொங்கல் பண்டிகை கொண்டாட தன் தாத்தாவோட கிராமத்துக்கு போயிருக்கா.. ஆனா அவங்க அங்க போனதில் இருந்து பொசும்பலா(தூறல்) விழுந்துக்கிட்டு இருந்தது. கிராமத்துல வந்து, தாத்தா வளர்க்குற ஆடு,மாடு,கோழி எல்லாத்தோடவும் விளையாடனும் அப்டின்னு ஆசையா வந்த ஷிவானிக்கு ஏமாற்றமா இருந்தது. அதனால, அவ அவங்க தாத்தாவோட செல்பேசிய வாங்கி அதுல விளையாட ஆரம்பிச்சிட்டா.. வானத்துல முகாமிட்டு இருந்த மேகக்கூட்டம் மெல்லமா விலகி, சூரியக்மேலும் படிக்க –>

அணிலைக் கண்டு சிரித்ததற்காக உண்மையில் மனம் வருந்தினான் துருவன். “அணில் தம்பி. என்னை மன்னித்து விடப்பா. ‘உருவம் கண்டு எள்ளாமை‌ வேண்டும்’ என்ற சொற்களின் முழு உண்மையையும் இன்று நான் புரிந்து கொண்டேன். உன்னுடைய சிறப்பான தகுதியின் முன்னால் நான் தான் இன்று சிறியவனாக உணர்கிறேன். உங்கள் மூவரின் உதவியுடன் நிச்சயமாக நான் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றி பெறுவேன். நாம் விரைந்து கிளம்பலாம். எண்ணிய கருமத்தை உடனடியாக நிறைவேற்றுவதேமேலும் படிக்க –>

அன்று மாலை குழந்தைகள் அனைவரும் பூங்காவுக்கு வரவும், சிட்டு பறந்து வந்து கிளையில் அமரவும், சரியாக இருந்தது. எல்லோரும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிவிட்டு, வட்டமாக அமர்ந்தனர்.  “ஹலோ! எல்லாருக்கும் வணக்கம்.  நல்லாயிருக்கீங்களா?” என்றது சிட்டு. “இருக்கோம் சிட்டு” என்றனர் குழந்தைகள், ஒரே குரலில். “ஓகே. டைனோசர் கதையை ஆரம்பிச்சிடலாம்.  போன மாசம் சொன்னதைக் கொஞ்சம் நினைவு படுத்திட்டு, மேலே சொல்றேன்” “நானே சொல்றேன் சிட்டு.  சரியான்னு நீ சொல்லு. டைனோசரோடமேலும் படிக்க –>

குழந்தைகளே, இன்னைக்கு உங்களிடம் இருக்கும் பழைய காலுறைகளை பயன்படுத்தி, பனி மனிதன் செய்யலாமா? தேவையான பொருட்கள்: வெள்ளை நிறக் காலுறை இரண்டு ரப்பர் பேண்ட் சாக்சில் நிறைக்க ஏதேனும் தானியம் (அரிசி) வரைய வண்ணப் பேனாக்கள். வண்ண ரிப்பன் முதலில், உங்கள் சாக்சினுள் அரிசியை நிரப்புங்கள். ஒரு ரப்பர் பேண்ட் அல்லது நூல் கொண்டு இறுக்கக் கட்டி விடுங்கள். இது, பனி மனிதனின் உடலின் கீழ்ப் பாகம். அடுத்து, மேற்மேலும் படிக்க –>

ஒரு ஊரில் ஒரு நரியும், சேவலும் வாழ்ந்து வந்தன.  இரண்டுமே தந்திரத்துக்குப் பெயர் போனவை.  அவை இரண்டும் ஒரு நாள் சந்தித்துப் பேசத் துவங்கின.   “ஒனக்கு எத்தனை தந்திரம் தெரியும்?” என்று நரி, சேவலிடம் கேட்டது. “முயன்றால், நான் மூன்று செய்வேன்.  உன்னால் எத்தனை முடியும்?” என்று சேவல் கேட்டது. “நான் 63 செய்வேன்,” என்றது நரி. “அதுல கொஞ்சம் சொல்லு, பார்ப்போம்,” என்றது சேவல். “நான் என்னோட இடதுமேலும் படிக்க –>

வணக்கம் பூஞ்சிட்டுகளே… எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஊரு பக்கம் ரொம்ப மழைன்னு செய்தி பாத்தேன்.. மழைல நல்லா ஆட்டம் போட்டீங்களா சிட்டுஸ்… குளிர்ல நடுங்கிட்டு இருக்கோம் நீ வேற.. அப்டிங்கறீங்களா!! இங்கேயும் அதே கதை தான். குளிர் தாங்கல.. நாம டிஸ்னிய சுத்திட்டு இருந்தபோது கூட இவ்வளவு குளிர் இல்ல. ஆனா போன வாரத்துல குளிர் தூக்கல்.. இந்தக் குளிர்ல லாஸ் ஏஞ்சல்ஸ் விட சான் ஃபரான்சிஸ்கோ’ல பார்க்க அற்புதமானமேலும் படிக்க –>

என்ன பூஞ்சிட்டூஸ்… கடந்த  பத்துநாளா  புயல் மழைன்னு நம்மை எல்லாரையும்  ஒரு புரட்டிப் புரட்டி  எடுத்துருச்சுல… ?! அதுலயும்  குளிர்.. அப்பப்ப்பா.. ஊரே ஊட்டி மாதிரி  ஆகிருச்சுல..! நம்ம ஊரே ஊட்டி மாதிரி  ஜில்லுனு  இருந்துச்சுன்னா ஊட்டி எப்படி  ஆகியிருக்கும்! ஊட்டிக்குப்  போனா மட்டுமில்ல.. ஊட்டின்னு  நினைச்சாலே  ஜில்லுனு ஐஸ்க்ரீம் ஆகிறது  மனசு. ஆமா,  குளுகுளு  ஜிலுஜிலு  ஊட்டிக்கு எப்படி  ஊட்டின்னு  பேர் வந்திருக்கும் ? கதை கேட்டுட்டாப் போச்சு!மேலும் படிக்க –>

நம் கற்பனை உலகத்தில் பல கோடி வருடங்களுக்கு முன்னால் இப்போதிருப்பது போலவே நீலநிற வானம், அந்த அழகு வானத்தைப் பேரழகு செய்ய காலையில் சூரியன் இரவில் நிலா, பல கோடி நட்சத்திரங்கள்    எல்லாம் இருந்தன.  அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு முக்கியமான கடமையும் இருந்தது. சூரியனுக்கு உயிர்கள் வாழத் தேவையான வெப்பத்தையும், பளிச்சென்ற ஒளியையும் காலை முழுதும் கொடுக்க வேண்டும். நிலவிற்கு இரவில் உயிர்கள் ஓய்வெடுக்க குளிர்ச்சியான, மிதமான ஒளி தரமேலும் படிக்க –>