ராஜலட்சுமி நாராயணசாமி (Page 3)

பொறியியல் பட்டதாரி, தற்சமயம் இல்லத்தரசி; இரு சிறார்களின் தாய்; இரண்டு அச்சு புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன. என்னைச் சுற்றி நிகழும் சமூக நிகழ்வுகள் கதைகளாக உருப்பெருகின்றன. தொடர்ந்து வாசித்து எழுதி, என்னை நானே மேம்படுத்த முயன்று கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர் நான்.

Maayavanam Feature

நம் மாயவனத்தில் ஒரு யானையும், முயலும் தோழிகளா இருந்தாங்க.. ரெண்டு பேரும் எப்போதும் ஒன்றாகவே தான் இருப்பாங்க. முயல் யானையின் முதுகில் ஏறிக் கொண்டு உயரத்துல இருந்து கீழே பூமி எவ்வளவு அழகா இருக்கிறது என்று பார்க்கும்.மேலும் படிக்க…

maayavanam

ஷிவானி தன்னோட அப்பா அம்மா பாட்டி தாத்தாவோட பொங்கல் பண்டிகை கொண்டாட தன் தாத்தாவோட கிராமத்துக்கு போயிருக்கா.. ஆனா அவங்க அங்க போனதில் இருந்து பொசும்பலா(தூறல்) விழுந்துக்கிட்டு இருந்தது. கிராமத்துல வந்து, தாத்தா வளர்க்குற ஆடு,மாடு,கோழி எல்லாத்தோடவும் விளையாடனும் அப்டின்னு ஆசையா வந்த ஷிவானிக்கு ஏமாற்றமா இருந்தது. அதனால, அவ அவங்க தாத்தாவோட செல்பேசிய வாங்கி அதுல விளையாட ஆரம்பிச்சிட்டா.. வானத்துல முகாமிட்டு இருந்த மேகக்கூட்டம் மெல்லமா விலகி, சூரியக்மேலும் படிக்க…

maaavanam6

க்ருஸ்துமஸ் வருதாம். எல்லோர் வீட்லயும் வண்ண வண்ண விளக்குகள், நட்சத்திர விளக்குகள் எல்லாம் வச்சு அலங்கரிச்சிக்கிட்டு இருந்தாங்க. சின்னப் பசங்களுக்கு எல்லாம் கிருஸ்தும்ஸ் அப்டின்னாலே ரொம்ப ஜாலியா இருக்கும். புது ட்ரஸ், கேக், கிருஸ்துமஸ் தாத்தா தரும் பரிசு, நண்பர்களோட விளையாட்டு அப்டின்னு ரொம்ப மகிழ்ச்சியா இருப்பாங்க. அப்டித் தான் நம்ம ஷிவானியும் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தாள். ஷிவானியோட தாத்தா அவளுக்கு புது ட்ரஸ் வாங்கி குடுத்திருந்தாங்க. பாட்டி கேக்மேலும் படிக்க…

lightning

ஒரு அடர்ந்த காட்டில் நிறைய மரங்களுக்கு நடுவுல ஒரு சின்ன செடி முளைச்சு வந்ததாம். அந்த சின்ன செடிய பார்த்து எல்லா பெரிய மரங்களும் கிண்டல் செஞ்சு சிரிச்சதாம். “நீ ஒரு குட்டி செடி. உன்னால எங்கள போல வளர முடியாது. வர்ற சூரிய ஒளி எல்லாத்தயும் நாங்களே எடுத்துப்போம். உனக்கு முளைக்க வேற இடமே கிடைக்கலையா” அப்படின்னு கிண்டல் செஞ்சிச்சாம். அந்த சின்னச் செடி சூரிய ஒளி கிடைக்காமமேலும் படிக்க…

Maayavanam Feature

அன்று மிகவும் சோர்வாக இருந்தாள் சிவானி. பள்ளியில் இன்று அவளது தேர்வு முடிவுகள் சொல்லப்பட்டன. சில பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் சிலவற்றில் மிகக் குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தாள். ஓரிரு பாடங்களில் தேர்ச்சி அடையவில்லை. சிவானி மிக நல்ல குழந்தை தான். நன்றாக வரைவாள். அழகாகப் பாடுவாள். ஆனால், பாடங்கள் மட்டும் கொஞ்சம் கடினமாகவே இருக்கும் அவளுக்கு. ஆனால், எப்போதும் அவள் தேர்ச்சியடையாமல் இருந்ததில்லை. இன்றோ பாடத்தில் தோல்வியைத் தழுவியதும்மேலும் படிக்க…

maayavanam3

சிவானி ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். கிச்சனிலிருந்து அவளது அப்பா குரல் கொடுத்தார். “சிவானி சாப்பிட வாடா” என அன்பாக அழைத்தார் ஷிவானியின் அப்பா ரகு. “வேணாம் பா, எனக்கு பசிக்கல” என்றாள் சிவானி. “தங்கம், நீ காலையிலயும் அரை தோசை தான் சாப்பிட்ட. இப்பவும் பசிக்கல ன்னு சொல்ற. அப்பா உனக்காக தான் காய்கறி சாதம் செஞ்சு வெச்சிருக்கேன். வா வந்து அப்பாவோட சேர்ந்து சாப்பிடு” எனமேலும் படிக்க…

maayavanam 2.4

அவ்வழகிய தேசம் நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்டு இருந்தது. ஆம், அத்தேசத்தின் வளமையைப் பெருக்க சகி நதி அழகிய தேசத்தை சுற்றி சூழ்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. அந்நாட்டின் பெயரும் சகி தான். ‘சகி’ என்றால் தோழி என்பது பொருள். சகி நாடும் நாட்டு மக்களும் மிகுந்த தோழமை உணர்வு உள்ளவர்கள்.  சகி நதியில் அழகழகான வஜ்ரா எனும் மீன்கள் காணப்பட்டன. அந்நாட்டிற்கு வறுமை என்பதே கிடையாது யாரும் எதையும் விளைவிக்கமேலும் படிக்க…