குழந்தைகளே, இன்றைக்கு அழகிய முயல் செய்யலாமா? பஞ்சு போல இருக்கும் வெண்முயலை யாருக்கு தான் பிடிக்காது? நாமும் இன்றைக்கு வெள்ளை முயல் ஒன்றை செய்யலாமா? தேவையான பொருட்கள்: செய்முறை: முயலின் உருவத்தை, பெரியவர்களை வரைந்து கொடுக்கச் சொல்லி வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது, இணையத்தில் கிடைக்கும் முயலின் கோட்டோவிய உருவப்படம் ஒன்றினை அச்செடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் படத்தில், முயலிற்கு இருக்கும், புசுபுசுவென்ற வெண் முடிகளுக்கு, பஞ்சினை ஒட்டுங்கள். முயலுக்கு, கண் கருப்புமேலும் படிக்க –>

அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம். வீட்டில் அம்மா அப்பா தாத்தா பாட்டி என அனைவரும் இருக்க, ராமுவை விளையாடுவதற்காக அண்டை வீட்டுக் குழந்தைகள் (neighbour children) அழைத்தார்கள். தெருவில் விளையாடுவதற்கு வாய்ப்பும் அனுமதியும் கிராமத்தில் பாட்டி தாத்தா வீட்டில் தங்கி இருக்கும் பொழுது மட்டுமே கிடைக்கும். எனவே ராமு தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட மனமில்லாமல் அம்மாவின் முகத்தைப் பார்த்தான். சுகந்தி: ராமு, ஓடிப் பிடித்து விளையாடும்போது கைமேலும் படிக்க –>

இதுவரை: புயல் காற்றினால் வேறு ஒரு உலகத்தில் சென்று இறங்கிய டாரத்தியும் அவளது நாய் டோட்டோவும் அங்கு மூன்று நண்பர்களை சந்திக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உதவி தேவைப்பட, அவர்கள் அதற்காக ஆஸ் நகரத்தின் பெரிய மந்திரவாதியை சந்திக்க பயணம் மேற்கொண்டனர். அந்தப் பயணத்தின் நடுவே போதைச் செடிகள் நிரம்பிய ஒரு தோட்டத்தைக் கடக்கும் பொழுது டாரத்தியும் சிங்கமும் மயக்கம் அடைந்து விட்டனர். இனி.. அத்தியாயம் 3 “ஐயோ இன்னும்மேலும் படிக்க –>

கவிஞரின் குரல் சின்னச் சின்னக் கண்ணா வா! சிங்காரச் சிரிப்புடன் வா! அம்மாவென நீயழைத்தால் அமுதும் தேனும் பாயுதடா! சின்னச் சின்ன அடிகள் வைத்து சிரித்துக் குலுங்கி நீ நடந்தால் சிந்தையுமே சிலிர்க்குதடா! எந்தன் உளம் களிக்குதடா! வானகத்து நிலவும் இங்கே வையகத்தில் வந்தது போல் நீயும் வந்தாய் என்னருகில! நிலவு தென்றல் சுகம் தந்தாய்! வண்ண வண்ணக் கனவுகள வாழ்வினிலே தந்தவனே! அன்னை மடி தவழுகின்ற அழகு தமிழ்க்மேலும் படிக்க –>

பஞ்சதந்திரக் கதைகள் அமுதா தன்னுடைய ஐந்து வயது மகள் யாழினிக்கு மொட்டை மாடியில் வைத்து சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள். இரவு நேரம். வானத்தில் பௌர்ணமி நிலவு அவர்களைப் பார்த்து அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தது. ” நிலா நிலா ஓடிவா     நில்லாமல் ஓடிவா மலை மேல ஏறிவா     மல்லிகைப்பூ கொண்டு வா! “ என்று பாடிக்கொண்டே நிலாவைக் காட்டியபடி யாழினியைச் சாப்பிட வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். யாழினியோமேலும் படிக்க –>

பஞ்சதந்திரக் கதைகள் யானைகளின் கூட்டம் ஒன்று காட்டில் வசித்து வந்தது. யானைகளின் அரசன் தனது கூட்டத்துடன் அருகிலிருந்த நீர்நிலையில் நீர் அருந்தி விளையாடி சந்தோஷமாக அங்கு வாழ்ந்து வந்தது. அந்த நீர்நிலையில் நீர் வற்றிப் போக யானைகள் நீர் அருந்த முடியாமல் கஷ்டப் பட்டன. உடனே யானைகளின் அரசன் தனது கூட்டத்திலிருந்த ஒரு யானையை அனுப்பிக் காட்டில் வேறு நீர்நிலை அருகில் இருக்கிறதா என்று தேடிப் பார்த்து அறிந்து வரச்மேலும் படிக்க –>

பாரம்பரியக் கதைகள் முன்னொரு காலத்தில் ஒரு சிறிய நாடு இருந்தது. அந்த அரசனுக்கு ஏழு அழகான இளவரசிகள் பிறந்தார்கள். பாசத்தோடும், பரிவோடும் அவர்களை அரசன் வளர்த்து வந்தான். இளவரசிகள் வளர வளர அவர்களுடைய குறும்புத்தனமும் கூடி வந்தது. அரசனும் அரசியும் எதற்கும் அவர்களைக் கடிந்து கொள்ளாமல் அளவில்லாத அன்பு செலுத்தினார்கள். இளவரசிகள் என்ன கேட்டாலும் பெற்றோர் உடனடியாகக் கொடுத்து விடுவார்கள். இளவரசிகள் அனைவரும் ஒரு பெரிய அறையில் ஒன்றாகத் தான்மேலும் படிக்க –>

அமெரிக்க புவியியலாளர் -மேரி தார்ப் அமெரிக்க புவியியலாளரும், கடல்சார் வரைபடவியலாளருமான மேரி தார்ப்பின் வாழ்க்கையை கூகுள் அதன் முகப்புப் பக்கத்தில் சிறப்பு டூடுல் வெளியிட்டு கெளரவித்துள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு நவம்பர் 21அன்று அமெரிக்க நாடாளுமன்ற லைப்ரரியால் 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த வரைப்படக் கலைஞர்களில் ஒருவராக இணைத்து பெருமைப்படுத்தியது. அட்லாண்டிக் பெருங்கடலின் முதல் புவியியல் வரைபடத்தை உருவாக்கி அதன் கோட்பாடுகளை நிரூபித்த பெருமை உடையவர், மேரி தார்ப். இவரது பெருமையைமேலும் படிக்க –>